பாஜ முன்னாள் தலைவர் நினைவு தினம் அனுசரிப்பு

சேலம், ஜூன் 2: சேலத்தை சேர்ந்த பாஜ முன்னாள் மாநில தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான லட்சுமணனின் 4வது நினைவு தினம், நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி, செவ்வாய்பேட்டை தேர்நிலையத்தில் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் கோபிநாத் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு முன்னிலை வகித்தார். இதில், பொதுச் செயலாளர் சசிகுமார், ஆன்மீகம் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் அபிராமி முருகேசன், ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் பாலவிநாயகம், நிர்வாகிகள் விஜய், பழனிசாமி, வடிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டு, லட்சுமணனின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Related posts

கிராமத்தில் புகுந்த ஒற்றை யானை விரட்டியடிப்பு

சாமியார் கொலையில் மேலும் ஒருவர் கைது வள்ளிமலை அருகே நடந்த

₹3.50 கோடி ஜிஎஸ்டி பாக்கி தகவலால் வேலை தேடும் வாலிபர் அதிர்ச்சி நடவடிக்கை கோரி வேலூர் கலெக்டரிடம் புகார் பான் எண் மூலம் கோவையில் போலி நிறுவனம்