பாஜ மாவட்ட செயலாளர் மீது போலீசில் புகார் திமுக பிரமுகர் மீது பேஸ்புக்கில் அவதூறு

குடியாத்தம்: திமுக மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் குறித்து பேஸ்புக்கில் அவதூறு பரப்பியதாக பாஜ மாவட்ட செயலாளர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் குமரன், திமுக மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர். இவர் சமூக வலைதளங்களில் திமுக பொதுக்கூட்டம், திமுக அரசின் சாதனைகள் ஆகியன குறித்து பேசி வருகிறார். இந்நிலையில், குடியாத்தத்தை சேர்ந்த பாஜ மாவட்ட செயலாளர் லோகேஷ், அவரது பேஸ்புக் பக்கத்தில் திமுக பேச்சாளர் குமரன் புகைப்படத்தை மார்பிங் செய்து பதிவிட்டு அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, அவதூறு பரப்பிய பாஜ மாவட்ட செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடியாத்தம் நகர மன்ற தலைவர் சவுந்தரராஜன், ஒன்றியக்குழு தலைவர் சத்யானந்தம், நகராட்சி கவுன்சிலர்கள் அர்ச்சனா நவீன், கோவிந்தராஜ் மற்றும் திமுக தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்த நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று குடியாத்தம் டிஎஸ்பி ராமமூத்தியிடம் புகார் மனு அளித்தனர். இதையடுத்து, இந்த புகார் குறித்து விசாரணை செய்ய டவுன் இன்ஸ்பெக்டர் லட்சுமிக்கு டிஎஸ்பி உத்தரவிட்டுள்ளார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை