பாஜ கவுன்சிலரின் டூவீலர் எரிப்பு

பரமக்குடி: பரமக்குடி ஒன்பதாவது வார்டில் வசித்து வருபவர் பானுமதி. மாற்றுத்திறனாளியான இவர் பரமக்குடி நகர்மன்ற உறுப்பினர். பாஜவை சேர்ந்த இவர் வசித்து வரும் புளிய மரத்தெரு பகுதியில், நேற்று முன்தினம் இரவு வீட்டின் வெளியே டூவீலரை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். காலையில் எழுந்து பார்த்தபோது டூவீலர் தீ வைக்கப்பட்டு பாதி எரிந்த நிலையில் இருந்தது. வாகனம் முழுவதும் சேதப்படுத்தி சீட் கிழிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து பானுமதி பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து