பாஜ ஆர்ப்பாட்டம்

 

திருச்செங்கோடு, மே 4: திருச்செங்கோட்டில் பாஜவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவரும் பாஜ பிரமுகருமான சங்கர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, நாமக்கல் மேற்கு மாவட்ட பட்டியல் அணி பாஜ சார்பில் ஆர்ப்பாட்டம் திருச்செங்கோடு பழைய பஸ் ஸ்டாண்ட் அண்ணா சிலை அருகே நடந்தது. நாமக்கல் மேற்கு மாவட்ட பாஜக பட்டியல் அணி தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். பாஜக மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில், மாநில நெசவாளர் அணி தலைவர் பாலமுருகன், மாவட்ட பொதுச்செயலாளர் தினேஷ்குமார், ஈஸ்வரன், ரமேஷ், பூங்குழலி, சாந்தாமணி, செந்தில்குமார், பிரகாஷ், செங்கோட்டையன், செல்லவெங்கடேசன், சரவணன், ராமசாமி மற்றும் பாஜக நிர்வாகிகள் ஐயப்பன், சசிதேவி பழனிசாமி, கலந்து கொண்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை