கடத்தூர், ஜூன் 10: பிரதமர் நரேந்திர மோடி, தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்பதை முன்னிட்டு, கடத்தூர் பஸ் நிலையம் அம்பேத்கர் சிலை அருகே, பாஜவினர் கடத்தூர் மேற்கு மண்டல தலைவர் சிங்காரம் தலைமையில், பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சியில், தர்மபுரி மாவட்டத் துணைத் தலைவர் சிவன்தேவராஜ், நிர்வாகிகள் செல்வம், சிவலிங்கம், பச்சையப்பன், கார்த்திக், பழனி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.