பாஜக அரசை கண்டித்து கிறிஸ்தவ கூட்டமைப்பு பேரணி

பட்டுக்கோட்டை, ஆக. 7: மணிப்பூர் கலவரத்தை தடுக்க தவறிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்து பட்டுக்கோட்டை அருகே கிறிஸ்தவ கூட்டமைப்பினர் பேரணி – ஆர்ப்பாட்டம் நடத்தினர். மணிப்பூர் கலவரத்தை தடுக்க தவறிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்து தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள செபஸ்தியார்புரம் பங்கு சார்பில் கிறிஸ்தவ கூட்டமைப்பினர் நேற்று பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். செபஸ்தியார்புரம், கொள்ளுக்காடு, அந்தோணியார்புரம், மகிழங்கோட்டை, அழகியநாயகிபுரம், ஆண்டிவயல், மருதங்காவயல் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பெண்கள் உள்பட 1,000க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து சின்ன ஆவுடையார் கோயில் பகுதியிலிருந்து பேரணியாக புறப்பட்டனர்.

முன்னதாக மணிப்பூர் கலவரத்தில் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தியதுடன், மணிப்பூரில் அமைதி நிலவ வேண்டும் என்று வலியுறுத்தி கூட்டுப்பிரார்த்தனை செய்தனர். அதனைத்தொடர்ந்து சின்ன ஆவுடையார் கோயில் பள்ளி வளாகத்திலிருந்து பேரணியாக புறப்பட்ட 1,000க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஒன்றிய பாசிச பாஜக அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பியவாறு சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக வந்து கொள்ளுக்காடு பேருந்து நிலையத்தை அடைந்தனர். அதனைத்தொடர்ந்து பேருந்து நிலையம் அருகில் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது மணிப்பூர் கலவரத்தை தடுக்க தவறிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை