பஸ் மோதி முதியவர் பலி

அலங்காநல்லூர், ஏப்.10: அலங்காநல்லூர் அருகே பேருந்து மோதி முதியவர் உயிரிழந்தார்.அலங்காநல்லூர் அருகே உள்ள பூதகுடி பகுதியில் நேற்று முன்தினம் இரவு சுமார் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் நடந்து சென்றார். அப்பொழுது அலங்காநல்லூரில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பேருந்து முதியவர் மீது மோதியது. இதில் முதியவர் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இறந்த முதியவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை