பஸ்ஸின் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது

 

திருப்புவனம், ஜூலை 19: திருப்புவனம் அடுத்த பழையனூர் குறுந்தங்குளத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு திருப்புவனம் வந்த அரசு டவுன் பஸ்சை டிரைவர் சதீஷ்குமார் ஓட்டிவந்துள்ளார். கண்டக்டராக ரகுநாதன் இருந்தார். பஸ் திருப்புவனம் பேரூராட்சி அலுவலகம் முன்பு வந்து கொண்டிருந்தபோது, திருப்புவனம் இந்திரா நகர் காலனியை சேர்ந்த அய்யனார்(24), முத்துக்குமார்(35) ஆகியோர் பஸ்சை மறித்து டிரைவர் சதீஷ்குமாரை அவதூறாக பேசி கல்லால் வீசி பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்து விட்டு ஓடியதாக தெரிகிறது. இதுபற்றி டிரைவர் சதீஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில், அய்யனாரை திருப்புவனம் போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய முத்துக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்