பஸ்சில் கஞ்சா கடத்தல்: பெண் உள்பட 2 பேர் கைது

திருத்தணி: ஆந்திராவில் இருந்து திருத்தணி வழியாக போதை பொருட்கள் கடத்தி வருவதாக திருவள்ளூர் எஸ்பி வருண்குமாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, திருத்தணி எஸ்ஐகுமார் தலைமையில் தனிப்படை போலீசார், நேற்று முன்தினம் இரவு பொன்பாடி சோதனைச்சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, அவ்வழியாக வந்த ஒரு பஸ்சில் இருந்த பயணிகளை போலீசார் சோதனை செய்தனர். அதில், ஒரு பெண் உள்பட 2 பேர் கஞ்சா பொட்டலம் வைத்திருந்னர். அவர்களை பிடித்து, காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்ததில் திருவள்ளூர் அருகே புட்லூரை சேர்ந்த சுகந்தி (30), கும்மிடிப்பூண்டி பத்மநாபன் என தெரிந்தது.   அவர்களை கைது செய்தனர்…

Related posts

தக்கலையில் காருக்கு வழிவிடாததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம் கோழிப்பண்ணை உரிமையாளர் வீட்டை சூறையாடிய கும்பல்

தமிழகம் முழுவதும் 53 பேரை ஏமாற்றி திருமணம் `சத்யாவை நம்பி சொகுசு வாழ்க்கை வாழ்ந்தேன்’

கும்பகோணத்தில் பயங்கரம் மனைவி கழுத்தை நெரித்து கொன்ற கொடூர கணவர்