பவானி ஆற்றங்கரையில் சூதாடிய 6 பேர் கைது

சத்தியமங்கலம், ஜூலை 16: சத்தியமங்கலம் அருகே உள்ள ஆலத்துக்கோம்பை பவானி ஆற்றங்கரையில் பணம் வைத்து சூதாடுவதாக சத்தியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அப்பகுதியில் ரோந்து சென்ற போலீசார் பவானி ஆற்றங்கரையில் தேடிப் பார்த்தபோது அப்பகுதியில் ஆறு பேர் பணம் வைத்து சூதாடியதை கண்டுபிடித்து சுற்றி வளைத்து பிடித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் ஆலத்துக்கோம்பையைச் சேர்ந்த சதீஷ் (29), மணி (30), கோபால் (43), சண்முகம் (42), செம்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பழனிவேல் (29), நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை சேர்ந்த பிரசாந்த் (19) ஆகியோர் என்பதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள், பணம் ரூ.12,470 மற்றும் 5 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சூதாட்ட வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

Related posts

மாத்தூர் கோயிலில் ஆடி திருவிழா

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் 2 கோடி பயனாளிகளை விரைவில் சென்றடையும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

வடசென்னை பகுதி மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம்: வியாழக்கிழமைதோறும் நடக்கிறது