சென்னை: வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் பேசியதாவது: மஞ்சள் தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் மஞ்சள் பயிருக்கான ஆராய்ச்சி மையம் சுமார் 100 ஏக்கர் பரப்பில், அமைக்கப்படும். இதற்கென, ரூ.2 கோடி மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் உதவியுடன் இயங்கும் தேசிய வேளாண் உயர் கல்வி திட்டத்தின் மூலம் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் பெறப்பட்டு, இளநிலை மாணவர்களின் தொழில் முனையும் திறன் மேம்படுத்தப்படும். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வேளாண் பட்டப்படிப்பில் இது தொடர்பான பாடங்கள் விருப்பப் பாடமாக சேர்க்கப்படும். …