பழுதடைந்த சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு

ஊத்தங்கரை, ஜூலை 10: ஊத்தங்கரை ஒன்றியம், பாவக்கல் ஊராட்சி அனுமன்தீர்த்தம் முதல், சிங்காரப்பேட்டை வரை செல்லும் பிரதான சாலையில், ஏராளமான கனரக வாகனங்கள் வந்து செல்கிறது. இந்த சாலையில் சமீபத்தில் பெய்த தொடர் மழையால், 7 இடங்களில் தளம் பெயர்ந்து போனது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்த செய்தி தினகரன் நாளிதழில் வெளியிடப்பட்டது. இதையடுத்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள், பழுதடைந்த சாலையை சீரமைக்க ஒன்றிய பொது நிதி ₹3,65 லட்சம் ஒதுக்கீடு செய்தனர். சாலை பணிகள் தொடங்கப்பட்டு, ஒருவார காலத்திற்குள் முடிக்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்தார்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்