பழவேற்காடு பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோவில் கைது

 

பொன்னேரி: பழவேற்காடு பகுதியில் 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மீனவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். பொன்னேரி அடுத்த பழவேற்காடு அரங்கம் குப்பத்தை சேர்ந்தவர் கோபால்(38). மீனவர். இவரது வீட்டின் அருகே உள்ள மற்றொரு மீனவர் வீட்டில் நேற்றுமுன்தினம் மாலை, 3 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தது. இதில், கோபால் அங்கு சென்று அந்த சிறுமியிடம் விளையாடிக் கொண்டே பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

அப்போது, அச்சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அவ்வழியாக சென்ற அப்பகுதி மீனவர்கள் கோபாலை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர், சிறுமியிடம் கேட்டபோது நடந்தது குறித்து கூறியது. உடனே, கோபால் மீது கோபம் அடைந்த கிராமத்தினர், கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர், கிராமத்தின் சார்பில் கிராம நிர்வாகிகள் பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி (பொறுப்பு) கிராமத்தின் நடுவே கட்டிப்போட்டு வைத்திருந்த கோபாலை மீட்டு விசாரணை நடத்தினார். மேலும், அவர் மீது போக்சோ வழக்கு பதிந்து கைது செய்த போலீசார், அவரை பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை