Friday, July 5, 2024
Home » பழமைக்கு மாறி வரும் விவசாய குடும்பங்கள் வீடுதோறும் காங்கயம் இன மாடுகள் வளர்ப்பு

பழமைக்கு மாறி வரும் விவசாய குடும்பங்கள் வீடுதோறும் காங்கயம் இன மாடுகள் வளர்ப்பு

by kannappan

காங்கயம் : காங்கயம் இன மாடுகளின் பல்வேறு நன்மைகளை உணர்ந்த விவசாய குடும்பங்கள் வீடு தோறும் காங்கயம் இன மாடுகளை வளர்க்கத் துவங்கியுள்ளனர். தமிழகத்தில் அலங்காநல்லூர் பாலமேடு ஜல்லிக்கட்டு உலக அளவில் புகழ் பெற்றது. இந்த ஜல்லிக்கட்டில் ஏராளமான காளைகள் போட்டியில் கலந்து கொண்டாலும் காங்கயம் காளைகளே களத்தில் வீரர்களை பந்தாடி வருகிறது. காங்கயம் காளைகளை அடக்குவதையே மாடு பிடி வீரர்கள் பெருமையாக கருதுகின்றனர்.காங்கயம் இன காளைகள் உலக புகழ் பெற்றது. முரட்டு குணம் கொண்டது. இதன் கொம்புகள்  கூர்மையாக இருக்கும். உடலின் முகம் பின் பகுதி கரிய நிறத்திலும் காளையின் வயிற்று பகுதி சாம்பல் நிறத்திலும் இருக்கும். உடல் ஆஜானு பாகுவாக இருக்கும். காளையை பார்க்கும்போதே மிரட்சி ஏற்படும். காங்கயம் காளைகள் வறட்சியான காலத்திலும் மிக குறைந்த உணவை சாப்பிட்டு அதிக நேரம் சோர்வு இல்லாமல் உழைக்கக்கூடியது. முரட்டு தனம், மூர்க்க குணம் கொண்ட இந்த காளையை மேலும் பயிற்சி மூலம் யாரும் எளிதில் நெருங்க முடியாத வகையில் மாற்றும்போது மாடு பிடி வீரர்கள் இந்த காளையை நெருங்கி பிடிக்க அதிகம் யோசிப்பார்கள். காங்கயம் களைகளை வாங்கி சென்று ஜல்லிக்கட்டில் பயன்படுத்தி வருகின்றனர். விவசாயத்தில், புதிய தொழில்நுட்பங்கள் உபகரணங்களை பயன்படுத்துவதால் நாம் பாரம்பரிய அடையாளமான மாடுகளை மறந்து விட்டோம். டிராக்டர் வரவு என இயந்திரங்களை பயன்படுத்தி வருவதால் மாடுகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்தது.  முன்பு ஒரு விவசாயியின் குடும்பத்தில் குறைந்தது 5 முதல் 10 வரை உறுப்பினர்கள் விவசாயத்தைக் கவனித்து வந்தார்கள். ஒரு வீட்டில் 10 முதல் 20 மாடுகள் வரை இருக்கும். மாட்டுச் சாணம் குப்பைத் தொட்டியில் போட்டு மக்கிய உரம், அந்த வருடத்தில் பயிரிடப்படும் பயிர்களுக்குக் கிடைக்கும். வயல்வெளிகளைச் சுற்றி நிறையப் புயல், மலைகளைத் தாங்கும் நாட்டு மரங்கள் இருக்கும். அம்மரங்களின் தழைகள் நெல் பயிரிடப்படும் சேற்றில் மிதித்து நெல் நடவு செய்வார்கள். இந்த நிலையைத் தற்போதைய விவசாய வல்லுநர்கள் இயற்கை விவசாயம் என்கிறார்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின், மக்களிடையே மாடுகள் வளர்ப்பதற்கு அதிக ஆர்வம் ஏற்பட்டது. படித்து விட்டு, ஐ.டி. துறையில் வேலையில் இருந்தாலும் காங்கயம் இன மாடுகள் வாங்க வேண்டும் என்ற நிலைக்கு பல விவசாய குடும்பத்தினரும் வந்தனர். மேலும் தற்போது கொங்கு மண்டல பகுதியில் அனைத்து சமூக மக்களிடையே பெண்ணுக்கு திருமான சீராக கொடுக்கப்படும் சீர் வரிசைகளில் காங்கயம் பசு மாடு முதன்மை இடத்தில் உள்ளது. மேலும் திருமண வீட்டு விஷேசத்தில் மாடுகளை காச்சிப்படுத்தி வருகின்றனர். மேலும் தம்பதிகள் திருமணம் முடிந்து அலங்கரிக்ப்பட்ட மாட்டு வண்டியில் அவர்களது வீடுகளுக்கு செல்வது நடைமுறைக்கு வரத்துவங்கியுள்ளது. மேலும் பள்ளி செல்லும் சிறுவர்கள் பலர் நாட்டு மாடு, நாட்டு கோழி ஆகியவற்றை வளர்ப்பதில் அதிக ஈடுபடு கொண்டுள்ளதை காண முடிகிறது. இதற்காக தங்கள் உண்டியல் சேமிப்பை மாட்டு கன்றுகள் வாங்க பயன்படுத்தி வருகின்றனர். கிராமங்களில் ஐந்துக்கு மேற்பட்ட நாட்டு மாடுகளை வளர்க்கும் சிறிய விவசாயிகள் பலர் நாட்டு மாட்டு சாணத்தில் இருந்து விபூதி தயாரிப்பது, கோமயத்தில் இருந்து பஞ்ச காவியம் உள்ளிட்ட மதிப்பு கூட்டு பொருட்களை தயாரித்து விற்பனை செய்வதால் இயற்கை விவசாயம் அதிகரித்து வருகிறது. நாட்டு மாட்டு பால் ஒரு லிட்டர் ரூ.120 வரை விற்கப்படுகிறது. இது போன்ற அரும் பெரும் நன்மைகளை உணர்ந்த பிறகு ,காங்கயம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்கள் வீடுகள் தோறும்  தற்போது ஒரு நாட்டு மாடு வளர்க்க துவங்கியுள்ளார்கள்.  “சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசுமாடு; பொன்னையே தந்தாலும் உனக்கேது ஈடு?!” இந்தப் பாடல் வரிகள் வெறும் கவி நயத்தின் பொருட்டு எழுதப்பட்ட வரிகளல்ல. உண்மையில் மாடுகள் மனிதனுக்கு வழங்கும் நன்மைக்குப் பொன் கொடுத்தாலும் ஈடாகாதுதான். …

You may also like

Leave a Comment

3 × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi