பழனி முருகன் கோயிலுக்கு இன்று சர்க்கரை கொள்முதல்

 

ஊட்டி,ஜூன்1: நீலகிரி மாவட்டம் ஊட்டி – கோத்தகிரி சாலையில் சுமார் 8 கி.மீ., தொலைவில் தொட்டபெட்டா சிகரம் அமைந்துள்ளது.தமிழகத்தின் மிக உயரமான சிகரங்களில் ஒன்றான தொட்டபெட்டாவை காண சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்து செல்வது வழக்கம். இச்சிகரத்திற்கு செல்ல கோத்தகிரி சாலையில் இருந்து 3 கிமீ., தூரத்திற்கு வனத்துறை கட்டுபாட்டில் உள்ள சாலை வழியாக பயணிக்க வேண்டும். நுழைவுவாயில் பகுதியில் வனத்துறை சார்பில் சூழல் சுற்றுலா மூலம் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூன் வாகன நுழைவு கட்டணம் வசூல் செய்ய பாஸ்ட் டேக் எனப்படும் மின்னணு பரிவர்த்தனை தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டது
கடந்த ஓராண்டாக இம்முறை கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், சீசன் சமயங்களில் நுழைவு கட்டணம் செலுத்தி செல்வதற்காக ஏராளமான வாகனங்கள் அணிவகுக்கின்றன. இதனால் ஊட்டி – கோத்தகிரி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

இதனால் இச்சாலையில் பயணிக்க கூடிய பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். தொட்டபெட்டா சிகரத்திற்கு செல்ல நுழைவு கட்டணம் வசூலிக்கும் பாஸ்ட் டேக் சோதனை சாவடியை வேறு இடத்திற்கு மாற்ற வனத்துறை நடவடிக்கை எடுத்து நுழைவு வாயில் பகுதியில் இருந்து சிகரத்திற்கு செல்ல கூடிய சாலையில் சுமார் அரை கிமீ., தொலைவில் பாஸ்ட் டேக் நுழைவு கட்டண வசூல் மையத்தை அமைக்க நடவடிக்கை எடுத்து, கடந்த மாதம் 16ம் தேதி பணிகள் துவங்கின. தொடர்ந்து கடந்த மாதம் கொட்டிய கனமழை உள்ளிட்ட காரணங்களால் குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.தற்போது வரை சுமார் 60 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் மீதமுள்ள பணிகளையும் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை