பழனிசெட்டிபட்டியில் தெருவிற்கு தந்தை பெரியார் பெயர்

தேனி, மே 8: தேனி அருகே பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் 15வது வார்டு உள்ளது. இந்த வார்டில் உள்ள தெருவிற்கு பெயர் ஏதும் வைக்கப்படாமல் இருந்து வந்தது. இதனையடுத்து, பேரூராட்சி சேர்மன் வக்கீல் மிதுன்சக்கரவர்த்தி இத்தெருவிற்கு தந்தை பெரியாரின் பெயர் வைக்க முடிவு செய்தார். இதன்படி, இத்தெருவிற்கு தந்தை ஈவெரா.பெரியார் தெரு என பெயரிட மன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதற்கான பெயர் பலகை திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. இவ்விழாவிற்கு பேரூராட்சி சேர்மன் மிதுன்சக்கரவர்த்தி தலைமை வகித்து பெயர் பலகையை திறந்து வைத்தார். இதில் பேரூராட்சி துணை சேர்மன் மணிமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு