பழநி கோயில் மலையடிவாரத்தில் விதிமீறி நிறுத்தப்படும் வாகனங்கள்

பழநி: பழநியில் சுற்றுலா பஸ்நிலையத்தை புறக்கணித்து சாலையோரம் வாகனங்களை நிறுத்தும் பக்தர்களால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகின்றது. பழநியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயில், அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக அழைக்கப்படுகிறது. இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய வெளி மாநிலங்களில் இருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்களின் வாகனங்கள் சாலையோரங்களில் நிறுத்தியதால், அடிவார பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.இதனால், பழநி அடிவாரத்தில் உள்ள கிழக்கு மற்றும் மேற்கு கிரி வீதிகளில் கோயில் நிர்வாகம் சார்பில் சுற்றுலா பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால், பழநி வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை இந்த பஸ் நிலையங்களில் நிறுத்தாமல் கிரி வீதி, அருள்ஜோதி வீதி, அய்யம்புள்ளி சாலை மற்றும் வையாபுரி குளம் பைபாஸ் சாலைகளில் நிறுத்துகின்றனர். இதனால், கூட்ட நேரங்களில் கடும் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.எனவே, காவல்துறையினர் இப்பகுதிகளில் கூட்ட நேரங்களில் ரோந்து சென்று சாலையோரங்களில் நிறுத்தும் வாகனங்களை சுற்றுலா பஸ் நிலையத்தில் நிறுத்தி முறைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

மின்னஞ்சல் மூலம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடி குண்டு மிரட்டல்: மிரட்டல் விடுத்த நபர் குறித்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை

நீட் எனும் சமூக அநீதிக்கு எதிராக திமுகவின் போரில் இன்று ஒலிக்கும் முழக்கங்கள் நாளைய வெற்றிக்கான அறிவிப்புகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

அமாவாசை, வார இறுதியையொட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத்துறை தகவல்