பழநியில் மண்டல அளவிலான ஆணழகன் போட்டி

பழநி: திண்டுக்கல் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் மற்றும் பிட்னஸ் சங்கம் சார்பில், பழநியில் மண்டல அளவிலான ஆணழகன் போட்டி நடந்தது. இதில் திண்டுக்கல், கோவை, திருப்பூர், நீலகிரி, தூத்துக்குடி, சேலம், தேனி என பல்வேறு மாவட்டங்களில் இருந்து 160 பேர் கலந்துகொண்டனர். 55, 60, 65, 70, 75, 80, 85  ஆகிய 7 எடை பிரிவுகளில் தனித்தனியாக போட்டிகள் நடந்தன. இதில் பங்கேற்ற இளைஞர்கள், தங்களது கட்டுமஸ்தான உடல் அசைவுகளை செய்து அசத்தினர்.பின்னர் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து அந்தந்த பிரிவில் முதலிடம் பிடித்தவர்களுக்கு மண்டல அளவிலான போட்டி நடந்தது. இதில் தூத்துக்குடியை சேர்ந்த லோகேஷ்வர் முதலிடம் பிடித்தார். தேனியை சேர்ந்த பாலகிருஷ்ணன் 2ம் இடமும், தூத்துக்குடியை சேர்ந்த ராஜா 3ம் இடமும் பிடித்தனர். தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சரவணப்பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், வணிகர் சங்க பேரமைப்பு பழநி நகர தலைவர் சரவணன் மற்றும் அமெச்சூர் ஆணழகன் பிட்னஸ் சங்க தலைவர் சுப்புராஜ், செயலாளர் நாகவடிவேல் மற்றும் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்….

Related posts

விம்பிள்டன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் கார்லோஸ்

யூரோ கோப்பை கால்பந்து: இங்கிலாந்து முன்னேற்றம்

ஜிம்பாவேயுடன் 2வது டி20: 100 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி: அபிஷேக் அதிரடி சதம்