பழநியில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

பழநி, செப். 24: பழநி அடிவாரம் மதனபுரத்தை சேர்ந்த கருப்பசாமி மகன் புகழ் (17). இவர் கல்லூரியில் பி.காம். முதலாமாண்டு படித்து வந்தார். புகழ் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், இதையறிந்த அவரது பெற்றோர் கண்டித்து படிப்பில் கவனம் செலுத்துமாறு கூறியதாக தெரிகிறது. இதனால் புகழ் மனமுடைந்து காணப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு புகழ் தனது அறைக்கு தூங்க சென்றார். நேற்று காலை நீண்டநேரமாகியும் வெளியே வரவில்லை.

இதனால், சந்தேகமடைந்த பெற்றோர் ஜன்னல் வழியாக பார்த்த போது புகழ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து பெற்றோர் அடிவாரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் புகழ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழநி அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர் மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

வார்டு குழு அலுவலக அறிவிப்பு பலகையில் மாநகர சாலையோர வியாபாரிகள் பட்டியல்: மாநகராட்சி கமிஷனர் தகவல்

வௌிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி: லட்சக்கணக்கில் பணத்தை இழந்த இளைஞர்கள் கலெக்டரிடம் மனு

மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம்