பழநி, ஜூலை 10: பழநி தாலுகா அலுவலகம் முன்பு நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய செயலாளர் தண்டபாணி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மணிகண்டன் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் சித்தரேவு கிராமத்தில் விவசாய நிலத்திற்கு செல்லும் வண்டிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மணி, கவுசல்யா, ராஜாமணி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் அரவிந்த், கிருஷ்ணசாமி, தொப்பம்பட்டி ஒன்றிய செயலாளர் சிவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பழநியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
previous post