Monday, July 8, 2024
Home » பழங்களின் மகிமைகளும், பலன்களும்

பழங்களின் மகிமைகளும், பலன்களும்

by kannappan

நன்றி குங்குமம் டாக்டர் பொதுவாக ஞானப்பழம் என்று மாம்பழத்தைக் கூறுவர். ஆனால் அனைத்துப் பழங்களுமே உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் ஞானப்பழங்கள்தான்.மாதுளம்பழம்: சளிக்கட்டு, இறுகிய மார்புச்சளி, சயநோய் இவற்றைப் போக்கும். உடலில் உள்ள விஷநீர் வெளியேறவும், வாதம், பித்தம் ஆகியவற்றை நீக்கவும் உதவும்.வாழைப்பழம்: இவற்றை ‘‘அரம்பைக்கண்’’ என்று சொல்வதுண்டு. தேவலோகப் பெண்களைப் போன்ற அழகை உண்டாக்கும் என்பதால் இவ்வாறு சித்தர்கள் பெயரிட்டனர். ஆனால் வாத நோய்க்காரர்கள் இப்பழத்தை உண்ணக்கூடாது. அப்படியே ஆசை ஏற்பட்டால் உணவோடு சேர்த்து உண்டால் அதிகம் தொல்லை உண்டாகாது.மாம்பழம்: நமைச்சல், மார்பு எரிச்சல், கண் நோய், கரப்பான் போன்றவற்றை உண்டாக்கக்கூடியது என்றாலும் விந்து அதிகரித்து ஆண்மை பலம் பெற இது உதவும்.நாவல்பழம்: உடல்வலி, கடுப்பு இவை நீங்கும். தாகத்தை தணிக்கும். நீரிழிவு, வெப்பம் ஆகியவற்றை நீக்கும் குணம் இதில் உண்டு.பாகற்பழம்: சாதாரணமாக இதைச் சாப்பிடுகிறவர்களுக்கு வாதம், பித்தம், கபம் ஆகியவற்றால் ஏற்படும் நோய்களும், மேகம், சுரம், காசம், இளைப்பு, மூலம், வயிற்று கிருமி தொல்லை ஆகியவற்றை நீக்கும். வெறும் வயிற்றில் இப்பழத்தின் சாறு தினமும் அருந்தினால் நீரழிவு குணமாகும்.பப்பாளிப்பழம்: சீழுடன் கூடிய ரத்த காயங்கள் ஆற பப்பாளிப்பழத்தை வெட்டி அதை அப்படியே ரணத்தின் மீது பூசி வந்தால் காயங்கள் ஆறும்.தக்காளிப்பழம்: இரண்டு கப் தக்காளிச் சாற்றை குளிக்கும் நீரில் கலந்து குளித்து வந்தால் வியர்வை நாற்றம் நீங்கும். கண் பார்வை தெளிவடைய, கண் சம்பந்தமான கோளாறுகள் நீங்க உணவில் தினசரி நிறைய தக்காளி சேர்த்துக்கொள்ள வேண்டும்.பேரீச்சம்பழம்: பித்த நீர் சுரப்பியினால் ஏற்படும் தீங்குகள் நீங்கும். உடலில் ஏற்படும் தேவையற்ற கொழுப்புச் சத்துக்களை நீக்க உதவும். கபம் சம்பந்தமான நோய்கள், நீர்ப்பிடிப்பு, ரத்தகாசம், ருசியின்மை, வயிற்று சிக்கல் தீரும்.- என். குப்பம்மாள், கிருஷ்ணகிரி.அன்றாட உணவில் சோயா அவசியம்* சோயா அதிகப் புரதச்சத்தும், குறைந்த கொழுப்புச்சத்தும் கொண்டுள்ளது. * சோயா பொருட்களைத் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் இதய நோய்கள் மற்றும் புற்றுநோயை முழுமையாகக் கட்டுப்படுத்தலாம். * எலும்புகளை பலப்படுத்துவதுடன், பெண்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்தது சோயா. * ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துகிறது. சோயாவில் கரையும் நார்ச்சத்து உள்ளதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. * சோயா, கெட்ட கொலஸ்ட்டிரால் அளவைக் குறைத்து நல்ல கொலஸ்ட்டிரால் அளவைக் கூட்டுவதன் மூலம் மாரடைப்பைக் கட்டுப்படுத்துகிறது. * சோயா உணவு மாதவிடாய் நின்றபின் உடலில் ஏற்படும் சங்கடங்களைக் குறைத்து எலும்புகளின் சீரழிவைத் தடுக்கிறது. * இதில் இரும்புச்சத்தும், கால்ஷியமும் நிறைந்துள்ளதால் கர்ப்பிணிப் பெண்களுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் ஏற்றது. * கண் சம்பந்தமான நோய்களை தடுக்கிறது. குழந்தைகளுக்கு உணவாக சோயா கொடுத்து வந்தால் உடல் எடை, உயரம் மற்றும் நினைவாற்றல் கூடுவதுடன் ஹீமோகுளோபின் எண்ணிக்கையும் உயரும். * பற்களை உறுதிப்படுத்துவதுடன் நரம்பு சம்பந்தமான நோய்களையும் தடுக்கிறது. * மூட்டுவலியைக் குறைத்து, சிறுநீரகக்கோளாறிலிருந்து பாதுகாக்கிறது. விளையாட்டு வீரர்களுக்கும் இது மிக அவசியமான ஊட்டச்சத்து உணவாகும்.தொகுப்பு: கே.ராஜேஸ்வரி, திருச்சி.

You may also like

Leave a Comment

14 − 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi