பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

 

மோகனூர், ஆக.19: மோகனூர் ஒன்றியம், சுப்ரமணியபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் தனச்செல்வி தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி மேற்பார்வையில் கூட்டம் நடைபெற்றது. மோகனூர் பேரூராட்சி மன்ற உறுப்பினர் காமராஜ் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள், பள்ளியின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் தலைவர் விஜயன், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான சிறப்பு பயிற்றுநர் ஆனந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். நிறைவாக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி