பள்ளி மாணவ, மாணவியருக்கு கட்டுரை, பேச்சு போட்டிகள் முதல் பரிசு ரூ.10 ஆயிரம்

 

விருதுநகர், ஜூலை 3: விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட நூலக கட்டிடத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 6 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் தமிழ்நாடு என பெயர் சூட்டிய ஜூலை 18ம் தேதியை பெருமைப்படுத்தும் வகையில் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் ஜூலை 9ம் தேதி காலை நடைபெற உள்ளது.
அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்கலாம்.

கட்டுரை போட்டி ‘ஆட்சி மொழி தமிழ்’ என்ற தலைப்பிலும், பேச்சுப்போட்டிகள் குமரித் தந்தை மார்சல் நேசமணி, தென்னாட்டு பெர்னாட்ஷா பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி என்ற தலைப்புகளிலும் நடைபெறும். மாவட்ட அளவில் ஒவ்வொரு போட்டிக்கும் முதல்பரிசு ரூ.10 ஆயிரம், 2ம் பரிசு ரூ.7 ஆயிரம், 3ம் பரிசு ரூ.5 ஆயிரம் என வழங்கப்படும். மாவட்ட அளவில் முதல்பரிசு பெறும் மாணவர்கள் ஜூலை 12ல் சென்னை மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

Related posts

மண்பாண்டங்கள் செய்ய களிமண் எடுக்க அனுமதி

ஆதிதிராவிடநலப்பள்ளியில் தற்காலிக பட்டதாரி ஆசிரியர்கள் பணி

தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் நடைபயிற்சியாளர்களுடன் கலந்துரையாடல்