பள்ளி மாணவி மாயம்

அரூர், மார்ச் 5: அரூர் அடுத்த கத்திரிப்பட்டியை சேர்ந்த 16 வயது மாணவி. பத்தாம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இவர், கடந்த 28ம் தேதி காலை 8 மணியளவில், நரிப்பள்ளியில் உள்ள பள்ளிக்கு சென்று, தன்னுடைய மதிப்பெண் பட்டியலை வாங்கி வருவதாக, தாயிடம் கூறி விட்டுச் சென்றார். அதன் பின்னர், அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் மாணவி கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில், கோட்டப்பட்டி போலீசார் மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

Related posts

சமயபுரம் டோல்கேட்டில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

செங்கோட்டை அருகே கார்-மினிலாரி மோதல் திருச்சியை சேர்ந்த இருவர் பரிதாப பலி

பலப்படுத்தும் பணி தீவிரம் தொட்டியம் அருகே மரத்திலிருந்து குதித்த சிறுவன் உயிரிழப்பு