பள்ளி மாணவி, பெண் மாயம்

அரூர், ஜூலை 2: அரூர் பகுதியை சேர்ந்த 17வயது மாணவி, அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். அவர் கடந்த 2 நாட்களுக்கு முன், பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி அவரது தந்தை அரூர் போலீசில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் மாணவியை தேடி வருகின்றனர். இதேபோல், தர்மபுரி பிடமனேரி பி.செட்டிஅள்ளியை சேர்ந்தவர் சலாவூதின். இவரது மனைவி ஆயிஷா(42). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். ஆயிஷா சிலரிடம் கடன் வாங்கியுள்ளார். மேலும் மகளிர் சங்கத்திலும் பணத்தை பெற்றுள்ளார். ஆனால் அதனை திருப்பி செலுத்தமுடியவில்லை என கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன், கடைக்கு சென்ற ஆயிஷா மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் எங்கு தேடியும் கிடைக்காததால், இதுபற்றி டவுன் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்