பள்ளி மாணவி சடலமாக மீட்பு: கொலையா? விசாரணை

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அருகே மாயமான பிளஸ் 2 மாணவியை வயல்வெளி கிணற்றில் போலீசார் சடலமாக மீட்டனர். திருக்கழுக்குன்றம் அருகே கல்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார். கொத்தனார். இவரது மனைவி ஜெயசுதா. இவர்களுக்கு ஒரு மகன், ரோகிணி (17) என்ற மகள் உள்ளனர். ரோகிணி, களத்தூர் அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 8ம் தேதி பள்ளிக்கு செல்வதாக கூறி சென்ற ரோகிணி, பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் இல்லை. இதுகுறித்து பெற்றோர், திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கல்பட்டு கிராமத்தில் உள்ள ஒரு வயல்வெளி கிணற்றில் பெண் சடலம் மிதப்பதாக திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்கு சென்று, சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். அதில், மாயமான ரோகிணி என தெரிந்தது. இதையடுத்து சடலத்தை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து போலீசார், மாணவி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலையா என தீவிரமாக விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது….

Related posts

சிறுவர் பூங்கா, நடைபாதை உள்ளிட்ட வசதிகளுடன் மேடவாக்கம் பெரிய ஏரியை சீரமைக்க முடிவு: விரைவில் பணிகள் தொடங்குகிறது

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையிலான மெமு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்: பயணிகள் வரவேற்பு

வேலை வாங்கி தருவதாக கூறி முன்னாள் அரசு ஊழியர் ரூ.10 லட்சம் நூதன மோசடி: போலீசார் வழக்குப்பதிவு