பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது

காரிமங்கலம், மார்ச் 14: காரிமங்கலம் அடுத்த கீழ் முருக்கம்பட்டியை சேர்ந்த 14வயது பள்ளி மாணவி, கடந்த சில தினங்களுக்கு முன், அக்கா வீட்டுக்கு செல்வதாக கூறி சென்ற நிலையில் மாயமானார். அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடி வந்த நிலையில், மாயமான மாணவியே மீண்டும் வீடு திரும்பினார். தன்னை காரிமங்கலம் அடுத்த சீகலஅள்ளிப் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் அஸ்வின்(22) என்பவர் அழைத்துச் சென்றதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் பாலக்கோடு அனைத்து மகளிர் போலீசார், சம்பந்தப்பட்ட அஸ்வின் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்த தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காரிமங்கலம் சந்தை பகுதியில் சுற்றி திரிந்த அஸ்வினை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். பின்னர் காரிமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, தர்மபுரி சிறையில் அடைக்கப்பட்டார். சம்பந்தப்பட்ட மாணவியும் நீதிமன்ற உத்தரவின் பேரில், காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்….

Related posts

கடத்தூரில் கேட்பாரற்று நின்ற காரால் பரபரப்பு

கணவர் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை

தக்காளி விலை சரிவு