பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் யோகா மாஸ்டர் கைது

சென்னை: வண்ணாரப்பேட்டை மாநகராட்சி பள்ளியில் இலவச யோகா பயிற்சி நடத்தி, மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கோடம்பாக்கத்தை சேர்ந்த யோகா மாஸ்டர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த யோகா மாஸ்டர் சந்தானம் (57). இவர், அரசு அனுமதி இல்லாமல் கடந்த 7 ஆண்டுகளாக யோகா பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறார். மேலும், பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக யோகா கற்றுத் தருவதாக மாநகராட்சியில் அனுமதி பெற்று மாநகராட்சி பள்ளியில் யோகா வகுப்புகள் நடத்தி வந்துள்ளார்.இந்நிலையில், கடந்த வாரம் வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் தேதி முதல் 17ம் தேதி வரை 5 நாட்கள் மதியம் ஒரு மணியிலிருந்து 2 மணி வரை 10, 11, 12ம் வகுப்பு மாணவிகளுக்கு யோகா பயிற்சி வகுப்பு நடத்தி வந்துள்ளார். அப்போது, யோகா கற்று தருகிறேன் என்ற பெயரில் அங்கிருந்த மாணவிகளிடம் தகாத முறையில் பேசி ஒருசில மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.இதுகுறித்து மாணவிகள் ஆசிரியரிடம் கூறியுள்ளனர். பின்னர், ஆசிரியர்கள் ராயபுரத்தில் உள்ள குழந்தைகள் நல வாரிய குழு உறுப்பினர் லலிதாவிற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், அவர் விசாரணை செய்து, வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். ஆய்வாளர் பிரியதர்ஷினி வழக்குப்பதிவு செய்து மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசி பாலியல் தொந்தரவு கொடுத்த யோகா மாஸ்டர் சந்தானத்தை கைது செய்து விசாரணை நடத்தினர். அதை தொடர்ந்து குழந்தைகள் நல அமைப்பினர் விசாரணை நடத்தினர். பின்னர், யோகா மாஸ்டர் சந்தானத்தை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை