பள்ளி மாணவர்களுக்கு ஜாதி, இருப்பிடம், வருமான சான்று 2 நாட்களில் வழங்க நடவடிக்கை: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல்

திருச்சி: பள்ளி மாணவர்களுக்கு ஜாதி, இருப்பிடம், வருமான சான்று 2 நாளில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார். திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த வருவாய்த்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, மாநகராட்சி மேயர் அன்பழகன், திருச்சி எம்பி திருநாவுக்கரசர், கலெக்டர் பிரதீப்குமார் மற்றும் 4 மாவட்டங்களை சேர்ந்த வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.பின்னர் அமைச்சர் ராமச்சந்திரன் அளித்த பேட்டி: பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் உள்ளிட்டவைகள் 2 நாட்களுக்குள் கிடைக்கும் படியாக நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் பட்டா வழங்குவதில் பல்வேறு குளறுபடிகள் நடைபெறுவதாக எம்எல்ஏக்கள், எங்களுடைய கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். எனவே ஒரு மனிதன் 30 ஆண்டு ஒரே இடத்தில் இருந்தால் பட்டா செய்து தருமாறு கோரிக்கை மனு கொடுக்கும் போது, சட்டரீதியாக எப்படி நிவர்த்தி செய்து கொடுப்பது என்பது குறித்த பல்வேறு ஆலோசனைகளை முதல்வருடன் கலந்து ஆலோசித்து அதனை செய்ய தயாராக இருக்கிறோம் என்றார்….

Related posts

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!