பள்ளி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை

 

தேவாரம், மே 4: தேவாரம் அருகே லட்சுமிநாயக்கன்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (39). தனியார் பள்ளி ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி 13 வருடங்கள் ஆகிறது. 9 வயதில் பெண் குழந்தை உள்ளது.கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, இவரது மனைவி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பிரிந்து சென்று விட்டார்.

அதனால் மணிகண்டன் தாயோடு சேர்ந்து வசித்து வந்தார். இந்நிலையில் மணிகண்டன் தனது மனைவி பிரிந்த விரக்தியில், வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தேவாரம் போலீசார், மணிகண்டன் உடலை பிரேத பரிசோதனை செய்ய உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு