பள்ளியில் முப்பெரும் விழா

மதுரை, பிப். 9: மதுரை சுந்தரராஜபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழாவில் மாநில மற்றும் மாவட்ட அளவில் வினாடி வினா போட்டிகளில் வென்றவர்கள் மற்றும் தேசிய அறிவியல் கண்காட்சி இஸ்ரோவில் பங்கேற்று வென்ற மாணவருக்கும், பள்ளிக்கல்வித்துறை நடத்திய கலைத் திருவிழா மற்றும் விளையாட்டு போட்டிகளில் வென்றவர்கள் என 70 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. 100 சதவீகிதம் பள்ளிக்கு வருகை புரிந்த 24 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை மேயர் இந்திராணி பொன்வசந்த் வழங்கினார். இதில் துணை மேயர் நாகராஜன், மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், உதவி கமிஷனர் சுரேஷ்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், கவுன்சிலர் லக்ஷிகா உள்பட பலர் பங்கேற்றனர்.

Related posts

ரயில் நிலையத்தில் கடை வைத்து தருவதாக பாஜ நிர்வாகி ₹2.5 லட்சம் மோசடி பெண் தற்கொலைக்கு முயற்சி : கடிதம் எழுதி வைத்ததால் பரபரப்பு

போதையில் தங்கையை ஆபாசமாக திட்டியதால் ஆத்திரம்; மீன் பண்ணை ஊழியர் சரமாரி வெட்டிக்கொலை: உடன் பணியாற்றிய வாலிபர் கைது

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வசூலிப்பு; மும்மடங்கு லாபம் தருவதாக கூறி 1,930 பேரிடம் ₹87 கோடி மோசடி: 25 பேர் ஏஜென்ட்டுகளாக செயல்பட்டது அம்பலம்