பள்ளிப்பட்டு அருகே அர்ஜுனன் தபசு

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே அர்ஜுனன் தபசு நிகழ்ச்சி நடந்தது. பள்ளிப்பட்டு அருகே பொம்மராஜபேட்டையில் திரௌபதி அம்மன் ஆலய தீமிதித் திருவிழா மார்ச் 27ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் பகல் நேரங்களில் மகாபாரத சொற்பொழிவு, இரவில் தெருக்கூத்து நடைபெற்றுவருகிறது. நேற்று காலை அர்ஜுனன் தபசு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிராம மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

கோயில் வளாகத்தில் நடப்பட்ட தபசு மரத்தின் மீது, அர்ஜுனன் வேடமிட்ட நாடக கலைஞர் ஏறி பாடல்கள் பாடிக்கொண்டு உச்சிக்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த பழங்களை எடுத்து கோயில் முன் கூடியிருந்த மக்கள்மீது வீசினார். அவற்றை கைப்பற்ற பெண்கள், இளைஞர்கள் போட்டி போட்டனர். வரும் 9ம் தேதி மாலை தீமிதித் திருவிழா நடைபெறுகிறது.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்