பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர்களை தாக்கிய போதை ரவுடி கைது

தஞ்சை: தஞ்சை அடுத்த கள்ளப்பெரம்பூரில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ளது. இதில் நூற்றுக்கணக்கான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு ஆசிரியர்கள், மாணவ – மாணவிகள் வந்தனர். காலை 9.30 மணி அளவில் பள்ளியின் முன்புறம் உள்ள திடலில் வழிபாடு நடைபெற்றது. இதில் திடல் முன்பு இருந்த மேடையில் தலைமையாசிரியை உள்பட பல ஆசிரியர், ஆசிரியைகள் நின்று கொண்டிருந்தனர்.அப்போது திடீரென பள்ளி வளாகத்துக்குள் போதையில் வந்த ரவுடி செல்வக்குமார்(39) என்பவர் மேடை மீது ஏறி ஆசிரியர்களை தகாத வார்த்தைகளால் திட்டினார். அவரிடம் தலைமை ஆசிரியை ஷீலா கரோலின் பேசினார். இதை பொருட்படுத்தாத செல்வகுமார் தொடர்ந்து ஆபாச வார்த்தைகளை பேசிக் கொண்டே இருந்தார். இதை உடற்கல்வி ஆசிரியர் சண்முகம் தட்டி கேட்டபோது, அவரை செல்வகுமார் முகத்தில் தாக்கினார். மேலும் மற்றொரு ஆசிரியர் மருதுபூபதியையும் செல்வகுமார் தாக்கினார். இதனால் அங்கிருந்த மாணவ,மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.தடுத்த அனைவரையும் தகாத வார்த்தைகளால் திட்டிய ரவுடி, கத்தியைக் காட்டியும் மிரட்டி உள்ளார்.  தகவல் அறிந்து வந்த அப்பகுதி மக்கள் செல்வக்குமாரை பிடிக்க முயற்சித்தனர் அதற்குள் அவர் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தலைமைஆசிரியை ஷீலா கரோலின் மாவட்ட பள்ளிக்கல்வி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். மேலும் தாக்குதலில் காயமடைந்த ஆசிரியர் சண்முகத்தை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் அளித்த புகாரின்பேரில் கள்ளப்பெரம்பூர் போலீசார் கள்ளப்பெரம்பூர் மந்தை அருகே வந்த செல்வக்குமாரை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை தஞ்சை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி தஞ்சை கிளை சிறையில் அடைத்தனர்….

Related posts

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது

மேட்ரிமோனியல் மூலம் டிஎஸ்பி, பைனான்சியர் உள்பட 50 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி சிக்கியது எப்படி?: பரபரப்பு தகவல்கள்