Tuesday, July 9, 2024
Home » பல வருடங்களாக தரம் உயர்த்தப்படாத ஆவடி ரயில் நிலையம்: அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை

பல வருடங்களாக தரம் உயர்த்தப்படாத ஆவடி ரயில் நிலையம்: அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை

by kannappan

ஆவடி: ஆவடி ரயில் நிலையத்தை தரம் உயர்த்தி அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை புறநகர் பகுதியின் முக்கிய ரயில் முனையமாக இருப்பது ஆவடி ரயில் நிலையம். ஆவடி நகராட்சி தற்போது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், ஆவடி காவல் ஆணையரகம், ஆவடி பேருந்து நிலையம் ஆகியவை தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆவடி ரயில் நிலையம் மட்டும் இன்னும் தரம் உயர்த்தப்படாமல் `பி கிரேடு’ ரயில் நிலையமாக இருக்கிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், கடற்கரை ரயில் நிலையம் மற்றும் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும் மின்சார ரயில்கள் ஆவடி வழியாக தான் திருவள்ளூர், அரக்கோணம் மற்றும் திருத்தணி பகுதிகளுக்கு செல்கிறது.ஆவடி ரயில் நிலையத்தில் 4 நடைமேடைகள் மற்றும் 6 இருப்பு பாதைகள் உள்ளன. சென்னை – ஆலப்பி, சென்னை – திருவனந்தபுரம் மற்றும் சென்னை – திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டும் ஆவடியில் நின்று செல்கிறது. ஒரு நாளில் அதிகபட்சமாக 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஆவடி ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஆவடி ரயில் நிலையத்தின் வருமானம் ஒரு மாதத்திற்கு, லோக்கல் பயண சீட்டு மற்றும் மாதாந்திர பயண சீட்டு மூலம் ரூ.7 லட்சம், அபராத தொகையாக ரூ.65 ஆயிரம், சரக்கு வாகனம் மூலம் ரூ.4 லட்சம் என மொத்தம் ஒரு மாதம் மட்டும் ரூ.11.65 லட்சம் வருமானம் கிடைக்கிறது. மேலும் பண்டிகை நாட்களில் இந்த வருமானம் மாறுபடும்.இவை இல்லாமல் ஆவடியிலிருந்து வெளியூர் செல்ல எடுக்கப்படும் பயணச்சீட்டு வருமானம் கணக்கிடாமல் வருடத்திற்கு ரூ.1.39 கோடி மேல் வருகிறது. இவ்வளவு வருமானம் வந்தாலும், ஆவடி ரயில் நிலையம் தரம் உயர்த்தப்படாமல், எந்த ஒரு அடிப்படை வசதியின்றி சுகாதாரமற்ற நிலையில் இருக்கிறது. இதேபோல், இருப்பு பாதையில் உள்ள தடுப்புகள் பெரும்பாலும் அடைக்கப்பட்ட நிலையில் இருந்தாலும், பொதுமக்கள் ஆபத்தை உணராமல் இரு சக்கர வாகனத்தில் குழந்தைகளுடன் பயணிகின்றனர். மேலும் பொதுமக்கள் நடைபாதை மேம்பாலத்தில் படிக்கட்டுகளில் நடக்கும்போது வயதானோர் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் சிரமத்தை போக்கவும், இருப்பு பாதையை பாதுகாப்பு இன்றி பொதுமக்கள் கடக்காமல் இருக்க கொரோனா பரவலுக்கு முன்பே 2019ல் தொடங்கப்பட்ட லிப்ட் அமைக்கும் பணிகள் இரும்பு கூடுகள் கட்டப்பட்ட நிலையில் பாதியில் நிற்கிறது. இடையில் 6 மாதம் வேலை நடந்தாக கூறப்படுகிறது. ஆனால், இதனுடன் தொடங்கப்பட்ட திருவள்ளூர் ரயில் நிலையத்தில் 6 மாதத்திற்கு முன்பு லிப்ட் பயன்பாட்டிற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவலுக்கு முன்பு விடப்பட்ட டெண்டர் காலாவதியான நிலையில் ஏப்ரல் 11ம் தேதி மீண்டும் டெண்டர் புதுப்பித்துள்ள தெற்கு ரயில்வே நிர்வாகம் பாதியில் நிற்கும் லிப்ட் பணியை எப்போது தொடங்கும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் எதிர் பார்த்து காத்திருக்கின்றனர். ஆவடி ரயில் நிலையத்தின் வருமானம் ஒரு  மாதத்திற்கு, லோக்கல் பயண சீட்டு மற்றும் மாதாந்திர பயண சீட்டு மூலம் ரூ.7 லட்சம், அபராத தொகையாக ரூ.65 ஆயிரம், சரக்கு வாகனம் மூலம் ரூ.4 லட்சம் என மொத்தம்  ஒரு மாதம் மட்டும் ரூ.11.65 லட்சம் வருமானம் கிடைக்கிறது. மேலும் பண்டிகை  நாட்களில் இந்த வருமானம் மாறுபடும். இவை இல்லாமல் ஆவடியிலிருந்து வெளியூர் செல்ல எடுக்கப்படும் பயணச்சீட்டு வருமானம் கணக்கிடாமல்  வருடத்திற்கு ரூ.1.39 கோடி மேல் வருகிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்,  கடற்கரை ரயில் நிலையம் மற்றும் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும் மின்சார ரயில்கள் ஆவடி வழியாக தான் திருவள்ளூர், அரக்கோணம்  மற்றும் திருத்தணி பகுதிகளுக்கு செல்கிறது.ஆவடியில் மார்க்கமாக செல்லும் ரயில்கள்: (ஒரு நாளைக்கு)எக்ஸ்பிரஸ் மற்றும் விரைவு ரயில்கள்    50மின்சார ரயில்கள்     175சரக்கு ரயில்கள்    18ஆவடியிலிருந்து இயக்கப்படும் மின்சார ரயில்கள்    13…

You may also like

Leave a Comment

sixteen − 13 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi