‘பல இந்தியர்கள், பெண்களை மனிதர்களாக கருதுவதில்லை’ – ராகுல் காந்தி ட்வீட்

டெல்லி: பல இந்தியர்கள், பெண்களை மனிதர்களாக கருதுவதில்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் கஸ்தூரிபா நகரில் கடந்த 26ஆம் தேதி இளம்பெண் ஒருவரை போதைப் பொருட்களை விற்பனை செய்யும் கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, அவரது தலைமுடியை வெட்டி, செருப்பு மாலை அணிவித்து பொதுவெளியில் இழிவுபடுத்தியது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என டெல்லி மகளிர் ஆணைய தலைவர் மஸ்வாதி போலிஸாருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதையடுத்து இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 7 பேர் பெண்கள் உள்பட 14 பேரை போலிஸார் கைது செய்தனர். இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; ‘பெண் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டது நமது சமூகத்தின் கவலைக்கிடமான முகத்தை அம்பலப்படுத்துகிறது. பல இந்தியர்கள் பெண்களை மனிதர்களாகவே கருதுவதில்லை. இந்த வெட்கக்கேடான உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும்.’ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். …

Related posts

மும்பையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து

திரைப்பட நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து