பல ஆண்களுடன் பேசியதால் ஆத்திரம் இளம்பெண் அடித்து கொலை: கணவன் கைது

அம்பத்தூர்: அம்பத்தூர் காமராஜர் நகர் நேரு தெருவில் வசித்து வருபவர் வடமாநிலத்தை சேர்ந்த ஹரிஷ் பிரம்மா (26), தனியார் கம்பெனி ஊழியர். இவர், கடந்த சில மாதங்களுக்கு முன் சொந்த ஊரான உத்தரபிரதேசம் சென்றிருந்தார். அங்கு, சந்தையில் காய்கறி கடை நடத்தி வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்தவரும், கணவரை பிரிந்தவருமான ரசியா கத்தூனா (22) உடன் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. இதையடுத்து, ரசியா கத்தூனாவை திருமணம் செய்து, அம்பத்தூர் அழைத்து வந்துள்ளார். இருவரும் கடந்த 3 மாதங்களாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் இரவு நேரங்களில் ரசியா கத்தூனாவின் செல்போனை ஹரிஷ் ஆய்வு செய்தபோது, அவர் பல ஆண்களுடன்  பேசியது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த ஹரிஷ், மனைவியை தினமும் அடித்து சித்திரவதை செய்து வந்துள்ளார். நேற்று ஏற்பட்ட தகராறில் மனைவியை கட்டையால் அடித்துள்ளார். இதில், மயங்கி விழுந்த ரசியாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் சோதனையில் ரசியா வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அம்பத்தூர் போலீசார் வழக்கு பதிந்து, ஹரிஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்….

Related posts

வீட்டுவாசலில் போதையில் தூங்கியதால் அம்மிக்கல்லை தலையில் போட்டு வாலிபர் கொடூரக் கொலை: பெரும்பாக்கத்தில் பயங்கரம்

ஏரியில் பெண் சாமியார் வெட்டிக்கொலை: சென்னையை சேர்ந்தவர்?

பெண் தாசில்தாருக்கு மிரட்டல்; நெல்லை பெண் போலி ஐஏஎஸ் அதிகாரி சிறையில் அடைப்பு: பாஜ பிரமுகரும் கைது