Friday, July 5, 2024
Home » பல் டாக்டர் வேலை பார்த்துவந்த மகள் காதல் திருமணம் செய்ததால் அதிர்ச்சி: தாய், தந்தை தற்கொலை

பல் டாக்டர் வேலை பார்த்துவந்த மகள் காதல் திருமணம் செய்ததால் அதிர்ச்சி: தாய், தந்தை தற்கொலை

by kannappan

ஊத்துக்கோட்டை: பல் டாக்டர் வேலை பார்த்துவந்த மகள் காதலித்து திருமணம் செய்துகொண்டதால் விரக்தியடைந்த தாய் தற்கொலை செய்த நிலையில், தந்தை விஷம் குடித்து இறந்தார். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே மாம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (60). இவர் விவசாயி. இவரின் மனைவி சரளா (55). இவர்களது மகள் அர்ச்சனா (28). பல் டாக்டரான இவர், சென்னை ரெட்டேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். பெரியபாளையத்தில் இருந்து தினமும் வேலைக்கு பஸ்சில்  செல்லும்போது சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்துவரும் அக்கரப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கணபதி (35) என்பவருடன் அர்ச்சனாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி தெரியவந்ததாலும் இருவரும் வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதாலும் பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துவந்ததாக தெரிகிறது. ஆனால் இதை மீறி கடந்த மாதம் 28ம் தேதி சென்னையில் கணபதி, அர்ச்சனா ஆகியோர் திருமணம் செய்துகொண்டனர்.இதுபற்றி தெரியவந்ததும் பெண்ணின் தந்தை ஊத்துக்கோட்டை காவல்நிலையத்தில் தனது மகளை காணவில்லை என்று புகார் கொடுத்துள்ளார். இதுபற்றி விசாரணை நடத்திய போலீசார், அர்ச்சனா மற்றும் அவரது பெற்றோர் ஆகியோரை காவல்நிலையத்துக்கு அழைத்து விசாரித்துள்ளனர். அப்போது அர்ச்சனா, ‘’கணபதியுடன்தான் வாழ்வேன்’’ என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால் பெற்றோர் கடும் வேதனை அடைந்தனர். இதன்பிறகு பெற்றோர் கூறிய அறிவுரையையும் ேகட்கவில்லை என்று தெரிகிறது.இந்த நிலையில், இன்று காலை அர்ச்சனாவின் தாய் சரளா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த தாமரைச்செல்வன் மனைவி இறந்துகிடப்பது பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் வீட்டில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து இறந்துவிட்டார். அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஊத்துக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் போலீசாருடன் சம்பவ இடத்துக்கு சென்று, தம்பதி சடலங்களை பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்….

You may also like

Leave a Comment

fifteen − nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi