பல்வேறு வழக்குகளில் தொடர்பு: நீதிமன்றத்தில் வாலிபர் சரண்

சாத்தான்குளம், ஜூன் 14: பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வாலிபர், சாத்தான்குளம் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். சாத்தான்குளம் அருகே உள்ள பண்டாரபுரத்தை சேர்ந்தவர் சுயம்பு மகன் தினேஷ்குமார் (29). இவர் மீது கொலை, கொலை முயற்சி மற்றும் அடிதடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. இந்நிலையில் தினேஷ்குமார், சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி கலையரசி ரீனா, அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்