பல்லடம் அருகே 2 பைக் மீது சரக்கு ஆட்டோ மோதி சிறுமி உட்பட 4 பேர் பலி

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே புத்தரச்சல் பகுதியில் நேற்று காலை 4 மணிக்கு 2 பைக்குகளில் 2 தம்பதி மற்றும் ஒரு சிறுமி தாராபுரம் சென்று கொண்டிருந்தனர். அந்த வழியாக காய்கறி ஏற்றி வந்த சரக்கு ஆட்டோ 2 பைக்குகள் மீதும் மோதி கவிழ்ந்தது. இதில் பைக்குகளில் சென்ற சிறுமி உள்பட  4 பேர் பலியாகினர். போலீசார் நடத்திய விசாரணையில், பைக்கில் சென்றது புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த குமரேசன் (30), மனைவி ஆனந்தி (27) என்பதும், மற்றொரு பைக்கில் சென்றது பல்லடம் வடுகபாளையத்தை சேர்ந்த முருகன் என்ற பிரம்மநாயகம் (50), இவரது மனைவி முத்துமாரி (40), மகள் மகாகவி (4) என்பதும் தெரியவந்தது. பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட ஆனந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு்ள்ளார்….

Related posts

காலி மதுபாட்டிலை திரும்பப்பெறும் திட்டம் தமிழ்நாடு முழுவதும் செப்டம்பர் முதல் அமல்: ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்

நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி ஏன்? தொகுதி வாரியாக எடப்பாடி ஆலோசனை: வரும் 10ம் தேதி முதல் நடத்துகிறார்

நிலஅளவை, நில ஆவணங்கள் இணையவழி சேவை விவரம்: பொதுமக்கள் அறிந்துகொள்ள வசதி