பல்லடம் அருகே ரூ.4 லட்சம் பட்டு சேலைகள் பறிமுதல்

 

பல்லடம் மார்ச் 26: பல்லடம் அருகே ரூ. 4 லட்சம் மதிப்புள்ள பட்டு சேலைகளை தேர்தல் கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர். பல்லடம் அருகே கேத்தணரில் அவ்வழியாக வந்த வாகனங்களை பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் கனகராஜ் தலைமையில் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது மடத்துக்குளத்தில் இருந்து அவிநாசி சாவக்காட்டு பாளையம் நோக்கிச்சென்ற வேனை நிறுத்தி சோதனையிட்டனர்.

அப்போது அதில் தங்கராஜ் (43), அமுதா (37) ஆகியோர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.4 லட்சத்து 29 ஆயிரத்து 300 மதிப்புள்ள 81 பட்டு சேலைகள் கொண்டு வந்தது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அதனை பறிமுதல் செய்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன், பல்லடம் வட்டாட்சியர் ஜீவா ஆகியோரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்