பல்லடத்தில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்ட சிறப்பு முகாம்

 

பல்லடம், டிச.20: பல்லடத்தில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்ட சிறப்பு முகாமை துவக்கி வைத்து நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் ஆய்வு செய்தார். திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்ட சிறப்பு முகாம் மங்கலம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. முகாமை பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் துவக்கி வைத்து ஆய்வு செய்தார். இந்த நிகழ்வில் பல்லடம் நகர திமுக செயலாளர் ராஜேந்திரகுமார், நகராட்சி ஆணையாளர் முத்துசாமி, பொறியாளர் சுகுமாறன்,பல்லடம் வட்டாட்சியர் ஜெய்சிங் சிவகுமார்,

பல்லடம் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஜவகர், பல்லடம் மின் கோட்ட செயற்பொறியாளர் பழனிசாமி, போலீஸ் டி.எஸ்.பி.விஜயகுமார், நகர மதிமுக செயலாளர் வைகோ பாலு, இளங்கோவன், நகர காங்கிரஸ் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, நகராட்சி கவுன்சிலர்கள் தினேஷ்குமார், வசந்தாமணி தங்கவேல், பாலகிருஷ்ணன், ராஜசேகரன், நகர திமுக நிர்வாகிகள் நடராஜன், வேலுமணி, குட்டி பழனிசாமி, கெளஸ்பாட்ஷா, மார்க்கெட் தங்கவேல், ஜாகீர் உசேன், மாவட்ட விளையாட்டு அணி அமைப்பாளர் ஜெகதீஷ், தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி அமைப்பாளர் சேக் மக்தூம், மலைச்சாமி, சிலம்பரசன், மயில்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு