பல்லடம், ஜன.6: பல்லடத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 4வது வார்டு முதல் 12வது வார்டு வரையிலான் பகுதிக்கு சிறப்பு முகாம் பாரதிபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முகாமை பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் துவக்கி வைத்து ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்வில் நகராட்சி ஆணையாளர் முத்துசாமி, பொறியாளர் சுகுமாறன்,பல்லடம் வட்டாட்சியர் ஜெய்சிங் சிவகுமார், பல்லடம் மின் கோட்ட செயற்பொறியாளர் பழனிசாமி, போலீஸ் டி.எஸ்.பி.விஜயகுமார்,நகராட்சி கவுன்சிலர்கள் சவுந்திரராஜன்,சுகன்யா ஜெகதீஷ்,பாமிதா கயாஸ் அகமது, வசந்தாமணி தங்கவேல்,சபீனா ஜாகீர்உசேன், சசிக்குமார், தண்டபாணி,திணேஷ்குமார், ராஜசேகரன், பாலகிருஷ்ணன், நகர திமுக நிர்வாகிகள் நடராஜன், வேலுமணி, சுப்பிரமணியம்,குட்டி பழனிசாமி, மாவட்ட பிரதிநிதி கெளஸ்பாட்ஷா,வார்டு செயலாளர்கள் மார்க்கெட் தங்கவேல்,
ஜாகீர்உசேன், குமரேசன்,கழக முன்னோடிகள் கயாஸ் அகமது, கலிலூர் ரகுமான், ஆரிப் சித்திக், சிலம்பரசன், ராஜேஷ்,ரமேஷ், நகர மதிமுக செயலாளர் வைகோ பாலு, இளங்கோவன்,நகர காங்கிரஸ் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட திமுக விளையாட்டு அணி அமைப்பாளர் ஜெகதீஷ், மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளர் மலைச்சாமி, தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி அமைப்பாளர் சேக் மக்தூம், அரசங்காடு மயில்சாமி, லிங்ககுருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.