பல்லடம், ஆக. 1: பல்லடம் நகராட்சி தெற்குபாளையம் 3வது வார்டு பாரதிய ஜனதா கட்சி கிளை தலைவர் எஸ். சேகர் அக்கட்சியிலிருந்து விலகி பல்லடம் நகர திமுக செயலாளர் ந. ராஜேந்திரகுமார் முன்னிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். இந்நிகழ்ச்சியில், நகர அவைத் தலைவர் எல்.ஐ.சி. நடராஜ், நகர துணைச்செயலாளர் வேலுச்சாமி, பொருளாளர் குட்டி பழனிசாமி, நகர இளைஞரணி அமைப்பாளர் தினேஷ்குமார், மார்க்கெட் தங்கவேல், நந்தகுமார், மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.