பல்லடத்தில் த.மா.கா. ஆலோசனை கூட்டம்

 

பல்லடம், ஜூலை 9: பல்லடத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். வட்டார தலைவர் மலையம்பாளையம் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். நகர தலைவர் பிரண்ட்ஸ் முத்துக்குமாரசாமி வரவேற்றார். இதில் மாநில பொது செயலாளர் விடியல் சேகர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். இக்கூட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் காரணம்பேட்டை சின்னசாமி, மாவட்ட பொருளாளர் என்.வி.ராமசாமி, மாவட்ட துணை தலைவர் எஸ்.ஜெகதீஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

இதில் பல்லடத்தில் புறவழி சாலை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். பயன்பாடு இன்றி உள்ள காரணம்பேட்டை பேருந்து நிலையத்தை ஜவுளி சந்தையாக மாற்ற வேண்டும். பல்லடம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் திருச்சியில் ஜூலை 15ம் தேதி நடைபெறவுள்ள காமராஜர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்திற்கு திருப்பூர் வடக்கு மாவட்டத்தின் சார்பில் 2 ஆயிரம் பேர் பங்கேற்கவும் முடிவு செய்யப்பட்டது.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்