சென்னை: தஞ்சை தமிழ்ப் பல்கழைக்கழகம், தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர்களை நியமித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக, ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக வி.திருவள்ளுவன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 3 ஆண்டுகளுக்கு இப்பொறுப்பை வகிப்பார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் உயராய்வு மையத்தின் பேராசிரியரான இவர் 28 ஆண்டுகள் பணி அனுபவம் மிக்கவர். இதே போல, தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எம்.சுந்தர் நியமிக்கப்பட்டுள்ளார். அழகப்பா உடற்கல்வி பல்கலைக்கழகத்தின் முதல்வரான எம்.சுந்தர், 26 ஆண்டுகள் அனுபவம் மிக்கவர். இவர் 3 ஆண்டுகளுக்கு இப்பொறுப்பை வகிப்பார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. …