நாகர்கோவில்: தமிழ்நாடு முழுவதும் ரவுடிகளை கட்டுப்படுத்தும் வகையில் நீதிமன்றத்தால் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்தவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் குமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் பிரபலமாக இருந்த ரவுடி தாத்தா செந்திலை நேற்று முன் தினம், குமரி மாவட்ட தனிப்படை போலீசார் கைது செய்தனர். நாகர்கோவில் அருகே உள்ள ஒசரவிளையை சேர்ந்த செந்தில் என்ற தாத்தா செந்தில் (63) மீது கொலை வழக்குகள் உள்பட ஏராளமான வழக்குகள் உள்ளன. இதில் கடந்த 2010ல் நாகர்கோவில் ஒழுகினசேரியில் நடந்த பெருவிளை மோகன் கொலை வழக்கில், ஆஜர் ஆகாமல் தாத்தா செந்தில் தலைமறைவாக இருந்தார். இவருக்கு கடந்த 2019 ல் நாகர்கோவில் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து இருந்தது.