பருவமழை முன்னெச்சரிக்கையாக 1,460 தெருக்களில் தூர்வாரும் பணி: குடிநீர் வாரியம் தகவல்

சென்னை: கழிவுநீர் குழாய்கள், மேன்ஹோல்களில் தூர்வாரும் பணிகள், சென்னை மண்டலங்களில் உள்ள 1460 தெருக்களில் தொடங்கியது என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பகுதி அலுவலகம்- 1 முதல் 15 வரை உள்ள தெருக்களில் கழிவுநீர் செல்லும் குழாய்கள் மற்றும் இயந்திர நுழைவாயில்களில் உள்ள கசடுகளை அகற்றி தூர்வாரும் பணிகளை நேற்று முதல் 30ம்தேதி வரை மேற்கொள்கிறது. இதற்காக 15 மண்டலங்களில் உள்ள 1460 தெருக்களில் இப்பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளுக்காக 282 தூர்வாரும் இயந்திரங்கள், 161 ஜெட்ராடிங் இயந்திரங்கள் மற்றும் 57 கழிவுநீர் உறிஞ்சும் இயந்திரங்கள் என மொத்தம் 500 கழிவுநீர் இயந்திரங்களை பயன்படுத்தி இப்பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள தெருக்களில் கழிவுநீர் அடைப்பு, வழிந்தோடுதல் தொடர்பான புகார்களை சம்பந்தப்பட்ட பகுதி அலுவலகத்திலும் மற்றும் பணிமனை அலுவலகத்திலும் தொடர்பு கொண்டு தங்களுடைய குறைகளை நிவர்த்தி செய்துகொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை