பரிசளிப்பு விழா

 

மானாமதுரை, ஜூன் 24: மானாமதுரை திருவள்ளுவர் ஆண்கள் சுய உதவி குழு ஆண்டு விழாவை முன்னிட்டு அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படித்து பொதுத்தேர்வில் முதல் இடம் பெற்ற மாணவ மாணவியருக்கு பாராட்டு பரிசளிப்பு விழா நடைபெற்றது, தலைவர் தேவதாஸ் தலைமை வகித்தார். செயலாளர் நாகலிங்கம் முன்னிலை வகித்தார். செர்டு தொண்டு நிறுவன இயக்குனர் எல். பாண்டி, முதுநிலை கணக்கு அதிகாரி செல்வராஜ், ஆசிரியர் பயிற்றுநர் காளிராஜா ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மாரியப்பன், மண்பாண்ட கூட்டுறவு சங்க தலைவர் லட்சுமணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தினர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்