பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

 

சென்னை, செப்.10: சென்னை கடற்கரை – விழுப்புரம் இடையே இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்கள் பராமரிப்பு பணி காரணமாக, மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே 8.25, 8.55, 10.20 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள், திருவள்ளூர் – சென்னை கடற்கரை இடையே 9.35 மணி, சென்னை கடற்கரை- திருவள்ளூர் இடையே 7.50 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் இன்று மற்றும் நாளை ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல், சென்னை கடற்கரை – அரக்கோணம் இடையே காலை 4.05 மணிக்கு இயக்கப்படும் ரயில் நாளை மற்றும் 12ம் தேதி ரத்து செய்யப்படுகிறது. கும்மிடிப்பூண்டி – சென்னை கடற்கரை இடையே 9.45 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் இன்று மற்றும் நாளை ரத்து செய்யப்படுகிறது. மேலும் சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே 11.05, 11.30, 11.59 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் இன்று மற்றும் நாளையும், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே காலை 3.55 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் நாளை மற்றும் 12ம் தேதி, சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் இடையே ரத்து செய்யப்படுகிறது.

செங்கல்பட்டு – சென்னை கடற்கரை இடையே 9.10 மணிக்கு இயக்கப்படும் ரயில் இன்று மற்றும் நாளையும், திருமால்பூர் – சென்னை கடற்கரை இடையே இரவு 8 மணிக்கு இயக்கப்படும் ரயில், செங்கல்பட்டு – சென்னை கடற்கரை இடையே 10.10, 11 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் இன்று மற்றும் நாளை எழும்பூர், சென்னை கடற்கரை இடையே ரத்து செய்யப்படுகிறது. கூடுவாஞ்சேரி – சென்னை கடற்கரை இடையே 10.10, 10,40, 11.15 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் இன்று மற்றும் நாளை தாம்பரம் மற்றும் சென்னை கடற்கரை இடையே ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது