பராமரிப்பு பணி காரணமாக ஓயாமரி சுடுகாடு 3 நாட்கள் தற்காலிகமாக மூடப்படும்

 

திருச்சி, ஜூன் 2: திருச்சி மாநகராட்சியிலுள்ள ஓயாமரி சுடுகாடு பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் இன்று முதல் மூன்று நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்படுவதாக மாநகராட்சி கமிஷனர் சரவணன் அறிவித்துள்ளார்.
திருச்சி மாநகராட்சி வார்டு எண்.15க்கு உட்பட்ட ஓயாமரி சுடுகாட்டில் உடல்களை எரியுட்டும் நவீன தகன மேடைகள் உள்ளன. இந்த தகன மேடைகளில் ஏற்பட்டுள்ள சிறு பழுதுகளை சரி செய்யும் பணி இன்று முதல் துவங்குகிறது.

இதனை முன்னிட்டு நாளை (ஜூன் 3) முதல் ஜூன் 5 வரை மூன்று நாட்களுக்கு உடல்களை எரியூட்ட இயலாது. எனவே ஓயாமரி சுடுகாடு தற்காலிகமாக மூன்று நாட்களுக்கு மூடப்படுகிறது. மேலும் ரங்கம் அம்பேத்கர் நகர் மற்றும் கோணக்கரை ஆகிய பகுதிகளில் உள்ள நவீன எரிவாயு தகன மேடைகள் தொடர்ந்து செயல்படும் என திருச்சி மாநகராட்சி கமிஷனர் சரவணன் அறிவித்துள்ளார்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு